Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'மா' விற்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

'மா' விற்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

'மா' விற்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

'மா' விற்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 14, 2025 06:50 AM


Google News
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு யாதவ மகாசபை, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயி அணி சார்பில், மா விளைச்சலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்-யக்கோரி, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் ரவி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழக அரசு, மா விவசாயிகளுக்கு உரிய மரியாதை கொடுக்-காமல் உள்ளது. விவசாயிகளுக்கு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும். மத்திய, மாநில அர-சுகள் மா விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் மூலம் பலவிதமான ஐஸ்கிரீம்களை தயார் செய்து விற்கும்போது, மா பழச்சாற்றை பெற்று ஐஸ்கிரீம் மற்றும் பொருட்களை மதிப்பு கூட்டி பல்வகை கூல்டிரிங்ஸ் உற்-பத்தி செய்ய அரசு முன்வர வேண்டும்.

கூட்டுறவு மூலம் தமிழகத்தில் மா தொழிற்சாலை தொடங்க வேண்டும். தற்போது வரவுள்ள மாங்கனி கண்காட்சியில், அடிப்-படை ஆதார விலை, 25 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும். ஆந்திர அரசு, 4 ரூபாய் உற்பத்தி மானியம் அறிவித்-துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உற்பத்தி மானியம் அறி-விக்க வேண்டும். அன்னிய நாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா-விட்டால், மாங்கனி கண்காட்சி நடைபெறும் இடத்தில் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு பேசினார்.

சக்திவேல், ராஜி, கோவிந்தராஜி, ஜெயக்குமார், சவுந்தரராஜன், சிவகுரு, தட்சணாமூர்த்தி உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட மா விவசாயிகள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us