Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/திருவள்ளுவருக்கு கோவில் அரசிடம் நிதி கேட்டு தீர்மானம்

திருவள்ளுவருக்கு கோவில் அரசிடம் நிதி கேட்டு தீர்மானம்

திருவள்ளுவருக்கு கோவில் அரசிடம் நிதி கேட்டு தீர்மானம்

திருவள்ளுவருக்கு கோவில் அரசிடம் நிதி கேட்டு தீர்மானம்

ADDED : ஜூன் 30, 2025 03:41 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மாவட்ட திருவள்ளுவர் நலச்சங்க நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், வள்ளுவர் சங்கத்திற்கு உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு, சால்வை அணி-வித்து கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் பதவி-யேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதன்படி, மாவட்ட தலைவராக ஜெகநாத், செயலாளராக நம்பிராஜ், பொருளாளராக ஸ்ரீதர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கூட்டத்தில், பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டியில் திருவள்ளுவர் நலச்சங்கம் சார்பில், திருவள்ளுவருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு போதிய நிதி இல்லாததால், கோவில் கட்டும் பணி பல ஆண்டுகளாக முழுமை பெறாமல் உள்ளது. இதனால் தமிழக அரசு, திருவள்ளுவருக்கு கோவில் கட்ட நிதி வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us