/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நெடுங்கல் திரவுபதி அம்மனுக்கு பூக்கூடை கொண்டு செல்லும் நிகழ்வு நெடுங்கல் திரவுபதி அம்மனுக்கு பூக்கூடை கொண்டு செல்லும் நிகழ்வு
நெடுங்கல் திரவுபதி அம்மனுக்கு பூக்கூடை கொண்டு செல்லும் நிகழ்வு
நெடுங்கல் திரவுபதி அம்மனுக்கு பூக்கூடை கொண்டு செல்லும் நிகழ்வு
நெடுங்கல் திரவுபதி அம்மனுக்கு பூக்கூடை கொண்டு செல்லும் நிகழ்வு
ADDED : ஜூன் 14, 2025 06:54 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சண்முக செட்டி தெருவில் இருந்து, நெடுங்கல் திரவுபதி அம்மனுக்கு பூக்கூடை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
காலை, 7:30 மணிக்கு காவேரிப்பட்டணம் பகுதியில் இருந்து, திரவுபதி அம்மனுக்கு பூக்கூடை ஊர்வலம் நையாண்டி மேளத்-துடன் புறப்பட்டனர். இதில், விநாயகர் வேடம் அணிந்தும், பொய்க்கால் குதிரையுடன் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மதியம், 12:00 மணிக்கு நெடுங்கல் கிராமத்தில் உற்சவமூர்த்தி திரவுபதி அம்மன் மற்றும் போத்துராஜா சுவாமிகள் கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் போத்துராஜாவிற்கு அபி ேஷகம், ஆராதனை நடந்தது. இன்று (ஜூன் 14) காவேரிப்பட்டணம் சண்முக செட்டி தெருவில் இருந்து காலை, 5:00 மணிக்கு, வெங்கடாஜலபதி முன்னி-லையில், சிகை நீக்கும் நிகழ்ச்சி, 10:30 மணிக்கு ஊர்வலமாக ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை
நடக்கிறது.
நாளை, சிகை நீக்கிய சிறுவர்களுக்கு காதணி விழா நடக்க உள்-ளது. ஏற்பாடுகளை, அழகுடையான் மகரிஷி கோத்திரத்தார் குடும்பத்தினர்
செய்துள்ளனர்.