ADDED : மே 31, 2025 06:44 AM
அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி ஸ்டேஷன் எஸ்.ஐ., மோகன் மற்றும் போலீசார், பத்திகவுண்டனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், பெட்ரோல் விற்பனை செய்வது தெரிந்தது.
இதனால் விற்பனைக்கு வைத்திருந்த, 2 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளரான பத்திகவுண்டனுாரை சேர்ந்த முனியப்பன், 60, என்பவரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.