Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குழந்தை பெற்றெடுத்த மாணவி போக்சோவில் கடைக்காரர் கைது

குழந்தை பெற்றெடுத்த மாணவி போக்சோவில் கடைக்காரர் கைது

குழந்தை பெற்றெடுத்த மாணவி போக்சோவில் கடைக்காரர் கைது

குழந்தை பெற்றெடுத்த மாணவி போக்சோவில் கடைக்காரர் கைது

ADDED : ஜூன் 08, 2025 01:41 AM


Google News
தேன்கனிக்கோட்டை:பள்ளி மாணவி பெண் குழந்தையை பெற்றெடுத்ததற்கு காரணமான, ஜெராக்ஸ் கடைக்காரர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, மணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரேஷ், 43, ஜெராக்ஸ் கடை உரிமையாளர். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

இவர், அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த, 15 வயது மாணவியிடம், ஆசை வார்த்தை கூறி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அவரது பெற்றோர், இருதுக்கோட்டை துணை சுகாதார நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றனர். பரிசோதனையில் மாணவி, 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது.

இந்நிலையில், கடந்த, 3ம் தேதி இரவில், கர்நாடகா மாநிலம், ஜிகினியிலுள்ள மருத்துவமனைக்கு, பெற்றோருக்கு தெரியாமல் மாணவியை, ருத்ரேஷ் சிகிச்சைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனை வாசலிலேயே மாணவிக்கு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

மாணவி புகார் படி, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் ருத்ரேஷை நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us