Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நண்பனை கொல்ல முயன்ற 3 பேருக்கு 'காப்பு'

நண்பனை கொல்ல முயன்ற 3 பேருக்கு 'காப்பு'

நண்பனை கொல்ல முயன்ற 3 பேருக்கு 'காப்பு'

நண்பனை கொல்ல முயன்ற 3 பேருக்கு 'காப்பு'

ADDED : செப் 09, 2025 01:58 AM


Google News
அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த வண்ணாத்திப்பட்டியை சேர்ந்தவர் தணிகாசலம், 24. கட்டட தொழிலாளி; இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 22, குமார், 31, மற்றும் ராமர் கோவில் பகுதியை சேர்ந்த அருள், 36, ஆகியோரும் நண்பர்கள். கடந்த, 1ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, வேலை பார்த்த கூலியை வாங்க, குமார் வீட்டிற்கு தணிகாசலம் சென்றார். அப்போது, அவரை குமார், தகாத வார்த்தையால் திட்டி கீழே தள்ளி விட, அங்கிருந்த ஆறுமுகம் கத்தியால், தணிகாசலம் வயிற்றில் குத்தினார்.

பின், 3 பேரும் தப்பினர். தணிகாசலத்தின் அண்ணன் இளையராஜா, 25, அஞ்செட்டி போலீசில் கடந்த, 6ம் தேதி புகார் செய்தார். போலீசார், குமார், அருள் ஆகிய இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ஆறுமுகம் நேற்று கைது செய்யப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us