Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 4ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம்

4ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம்

4ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம்

4ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ADDED : ஜூலை 02, 2025 01:39 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை, வேலைவாய்ப்பு முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில், நாளை மறுதினம் (4ம் தேதி) காலை, 9:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில் கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி முதல், பிளஸ் 2, பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் என, அனைத்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். எனவே தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள, மேற்காணும் கல்வித்தகுதி உள்ள, மாற்றுத்திறனாளி மனுதாரர்கள், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 -291983 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us