ADDED : ஜன 06, 2024 07:14 AM
ஊத்தங்கரை : கல்லாவி அடுத்த மேட்டுத்தாங்கலை சேர்ந்தவர் செல்வராஜ், 65.
இவர் கடந்த, 3 இரவு, மேட்டுத்தாங்கல் அருகே கல்லாவி - மொரப்பூர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற மஹிந்திரா சைலோ கார் மோதியதில் இறந்தார். கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.