ADDED : அக் 24, 2025 12:58 AM
ஓசூர், தேன்கனிக்கோட்டை
அடுத்த போடிச்சிப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா, 55, சற்று
மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த, 15ல் வீட்டிலிருந்து வெளியில்
சென்றவர் மீண்டும் வீடு
திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை.
இது குறித்து அவர் மகன் அளித்த புகார் படி, கெலமங்கலம் போலீசார்
விசாரிக்கின்றனர்.


