Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வீடு புகுந்து நகை திருடியவர் கைது

வீடு புகுந்து நகை திருடியவர் கைது

வீடு புகுந்து நகை திருடியவர் கைது

வீடு புகுந்து நகை திருடியவர் கைது

ADDED : ஜூன் 28, 2025 03:49 AM


Google News
தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த உப்பாரப்பள்ளியை சேர்ந்-தவர் மஞ்சுநாத், 30. தனியார் நிறுவன ஊழியர்.

கடந்த, 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு வீட்டை பூட்டி, கழிவ-றையில் சாவியை வைத்து விட்டு வேலைக்கு சென்றார். மாலையில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் புட-வைக்கு அடியில் இருந்த சாவியை எடுத்து, 5 பவுன் நகையை மர்ம நபர் திருடி சென்றது தெரிந்தது. இது தொடர்பாக, தளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே இந்துாரை சேர்ந்த தமிழ்-செல்வம், 19, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us