Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமானது கிருஷ்ணகிரி டோல்கேட்: எம்.பி., செல்லக்குமார்

தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமானது கிருஷ்ணகிரி டோல்கேட்: எம்.பி., செல்லக்குமார்

தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமானது கிருஷ்ணகிரி டோல்கேட்: எம்.பி., செல்லக்குமார்

தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமானது கிருஷ்ணகிரி டோல்கேட்: எம்.பி., செல்லக்குமார்

ADDED : ஜன 25, 2024 10:03 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நேற்று, காங்., - எம்.பி., செல்லக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரியில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள டோல்கேட்டை இடமாற்றம் செய்ய அரசு, 60 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, டோல் நிறுவனத்தினர் திட்டம் தயாரித்து வழங்கினர்.

இந்நிலையில், டோல்கேட்டை முறையாக பராமரிக்கவில்லை, அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் டோல்நிர்வாகம் செலுத்தவில்லை என, மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும், டோல் நிர்வாகம் கண்டு கொள்ளாததால், ஜன., 23 முதல் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த டோல்கேட்டை எடுத்துக் கொண்டு கட்டணம் வசூலிக்கிறது. மத்திய அரசிடம் டோல்கேட் சென்று விட்டதால், இனி இடமாற்றம் செய்ய எந்த சிரமமும் இருக்காது. அதனால், விரைவில் டோல்கேட் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. எந்த உண்மையான பக்தனும் சுவாமியை வைத்து அரசியல் செய்ய முடியாது. நாங்கள் சவால் விடுகிறோம். கடந்த, 10 ஆண்டுகால, பா.ஜ., ஆட்சி, அவர்களுடைய சாதனை என, அவர்கள் பட்டியல் போட்டு விவாதம் நடத்த தயார் என்றால், நான் குற்றவாளி கூண்டில் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். மதம் என்ற ஒரு வார்த்தையை மட்டும் உச்சரிக்காமல், நாங்கள் தேர்தலை சந்திக்க தயார் என, பா.ஜ., தேர்தலை சந்தித்து பார்க்கட்டும். இந்தியாவில் ஒரு மாநிலத்திலும், ஒரு

சீட்டையும் பெற முடியாது.

ஜோலார்பேட்டை - ஓசூர் ரயில் பாதை அமைக்கும் பணிக்கு, 6 மாதங்களுக்குள் ஒப்புதல் பெற்று தந்து விட்டேன். கொரோனாவால் திட்டப்பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு ஒதுக்கிய, 2.45 கோடி ரூபாய் நிதியில், திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு சரிபார்க்கும் பணிகள்

நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us