/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 85,000 பேருக்கு பட்டா வழங்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அழைப்பு 85,000 பேருக்கு பட்டா வழங்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அழைப்பு
85,000 பேருக்கு பட்டா வழங்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அழைப்பு
85,000 பேருக்கு பட்டா வழங்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அழைப்பு
85,000 பேருக்கு பட்டா வழங்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அழைப்பு
ADDED : செப் 14, 2025 04:52 AM
கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 85,000 பேருக்கு பட்டா வழங்க வரும், தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, அலைகடலென திரண்டு வாருங்கள்' என, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்-துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவம், தமிழ்புதல்வன் திட்டம், தாயுமானவர் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் என்று எண்-ணற்ற திட்டங்களை தந்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
கடந்த, 4 ஆண்டு கால ஆட்சியில், எண்ணற்ற திட்டங்கள் தந்த முதல்வர் ஸ்டாலினை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் வரவேற்கிறேன். 85,000 பேருக்கு பட்டாக்கள், நல உத-விகள் வழங்கி, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடி-வுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைக்க உள்ளார்.
கிருஷ்ணகிரி டோல்கேட்டிலிருந்து, ராயக்கோட்டை மேம்-பாலம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், வனத்துறை அலுவலகம், ஆர்.சி., பெண்கள் பள்ளி, ஐந்துரோடு, சென்னை சாலை வழி-யாக, விழா மேடைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு, ஆங்-காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்-பான வரவேற்பு அளிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் அலைகடலென திரண்டு வழி-நெடுகிலும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.