Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

ADDED : ஜூலை 09, 2024 06:08 AM


Google News
ஒகேனக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, வினாடிக்கு, 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கர்நாடகாவிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்தினம் காலை, கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 4,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 554 கன அடி நீரும் என, 2 அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு, 4,554 கன அடியாக உள்ளது.

இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 3,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 5,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில், மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us