Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தனியார் ஊழியர் வீட்டில் தீ பொருட்கள் எரிந்து நாசம்

தனியார் ஊழியர் வீட்டில் தீ பொருட்கள் எரிந்து நாசம்

தனியார் ஊழியர் வீட்டில் தீ பொருட்கள் எரிந்து நாசம்

தனியார் ஊழியர் வீட்டில் தீ பொருட்கள் எரிந்து நாசம்

ADDED : ஜூன் 26, 2025 01:22 AM


Google News
ஓசூர், ஓசூர், பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் முனாப் அலி, 45. இவரது மனைவி ஷானாஸ் பர்வீன், 39. இருவரும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இரு மகள்கள். நேற்று முன்தினம் காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். அவர்களது மகள்கள் பள்ளி முடிந்து டியூசன் சென்றிருந்தனர். அப்பகுதியில் நேற்று முன்தினம் மின்தடை செய்யப்பட்டிருந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல் மின் சப்ளை வந்தவுடன், அவர்கள் தங்கியுள்ள வீட்டின் முதல் தளத்தில் மின்கசிவால் தீப்பிடித்தது.

கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டிலிருந்த, 'டிவி' ஏர்கூலர், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் துணிகள், குழந்தைகளின் கல்வி சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள், 15 பவுன் நகை மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்தால், அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us