Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அரசு பாலிடெக்னிக்கில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு பாலிடெக்னிக்கில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு பாலிடெக்னிக்கில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு பாலிடெக்னிக்கில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

ADDED : ஜூலை 04, 2024 05:57 AM


Google News
ஓசூர்: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள அறிக்கை:இக்கல்லுாரியில், 2024 - 25ம் கல்வியாண்டிற்கு, அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல் மற்றும் கணினி சார்ந்த உற்பத்தி தொழில்-நுட்பம் ஆகிய பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.

10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முத-லாமாண்டிலும், பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ., முடித்த மாணவர்கள் நேரடியாக இரண்டாமாண்டிலும் சேர முடியும்.அரசு பள்ளியில் படித்து, இக்கல்லுாரியில் சேரும் மாணவியருக்கு, புதுமைப்பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாயும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாயும் வழங்-கப்படும். மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கல்-லுாரியில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி-யாக விடுதி வசதி உள்ளது. இக்கல்லுாரியில் இறு-தியாண்டில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலை-வாய்ப்பு பெற்று தரப்படுகிறது.எனவே, இதுவரை கல்லுாரியில் சேராத மற்றும் உடனடி தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அசல் சான்றி-தழ்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரில் சென்று சேர்க்கை பெறலாம். மேலும், தொடர்புக்கு, 79045 31623, 90803 20850, 94423 84396, 86102 59959, 97917 22281 ஆகிய எண்களை அழைக்கலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us