Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த குழந்தைகள்

ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த குழந்தைகள்

ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த குழந்தைகள்

ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த குழந்தைகள்

ADDED : ஜூலை 15, 2024 12:17 AM


Google News
ஓசூர்: ஓசூரில், கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு குழந்தைகள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.ஓசூர், பாரதிதாசன் நகரிலுள்ள கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை, குழந்தைகளே அம்மனுக்கு, அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

கல்வி சிறக்கவும், நோய், நொடியின்றி வாழவும், 6 மாத குழந்தைகள் உட்பட, 7 வயது வரையுள்ள மாணவ, மாணவியர் வரை, அம்மனுக்கு அபி-ஷேகம் செய்கின்றனர். அதன்படி, நேற்று காலை குழந்தைகள், மாணவ, மாணவியர் காலை, 11:00 மணி முதல், ஏகாம்பரேஸ்வரர் கல்யாண காமாட்சி அம்மன் உற்சவ மூர்த்திக்கு, மஞ்சள், பால், பன்னீர் போன்ற, 5 திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். மூலவர் காமாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக காலை, 8:00 முதல், 10:00 மணி வரை, குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியரின் ஆயுள் விருத்திக்காகவும், ஆரோக்கிய-மாக இருக்கவும் ஆயுஷ் ஹோமம் நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, தி.மு.க., விளையாட்டு அணி மாவட்ட துணை அமைப்-பாளர் மஞ்சுநாதா உட்பட பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்-தனர். மேலும், திருமண தடை நீங்கி விரைவில் மண வாழ்க்கை அமைய, பக்தர்கள் பலர் அம்மனுக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us