/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஆனந்துார் பஞ்., ஆபீஸ் எதிரே குளம் போல் தேங்கும் கழிவு நீர்ஆனந்துார் பஞ்., ஆபீஸ் எதிரே குளம் போல் தேங்கும் கழிவு நீர்
ஆனந்துார் பஞ்., ஆபீஸ் எதிரே குளம் போல் தேங்கும் கழிவு நீர்
ஆனந்துார் பஞ்., ஆபீஸ் எதிரே குளம் போல் தேங்கும் கழிவு நீர்
ஆனந்துார் பஞ்., ஆபீஸ் எதிரே குளம் போல் தேங்கும் கழிவு நீர்
ADDED : ஜூலை 15, 2024 12:16 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, ஆனந்தூர் கிராமத்தில், 200க்கும் மேற்-பட்ட குடியிருப்பு வீடுகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி வருகி-றது.
இந்த கழிவுநீர் ஆனந்துார் பஞ்., அலுவலகம் எதிரிலும், காம-ராஜர், அண்ணாதுரை சிலை அருகேயும் உள்ள கால்வாயில் வழிந்-தோட வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. கடந்தாண்டு இங்கு மாவட்ட கவுன்சிலரின், 15வது நிதிக்குழு மான்ய திட்-டத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் உறிஞ்சுகுழி அமைக்கப்பட்டது. ஆனால் குடியிருப்பு வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர் உறிஞ்சுகுழி வழியாக வந்து, வெளியேற வழியின்றி, அருகிலேயே குளம் போல் தேங்கி நிற்கி-றது. இதனால் கொசுப்புழுக்கள் உருவாவதோடு, துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் முன், சம்மந்தப்பட்ட அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.