Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட 500 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட 500 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட 500 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட 500 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

ADDED : டிச 01, 2025 02:23 AM


Google News
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 28வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் புரு-ஷோத்தமரெட்டி. கட்சியில், மேற்கு மாவட்ட தகவல் தொழில்-நுட்ப பிரிவு தலைவராக இருந்தார். அத்துடன், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவுடன், மாநகராட்சி மண்டலக்குழு தலைவ-ராக இருந்தார். அ.தி.மு.க., மீது ஏற்பட்ட அதிருப்தியால், அக்-கட்சியிலிருந்து விலக முடிவு செய்து, கடந்த மாதம் அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்து, தி.மு.க.,வில் இணைய விருப்பம் தெரிவித்தார். இதையறிந்த, அ.தி.மு.க., தலைமை, அவரை கட்சியிலிருந்து நீக்கியது. அதேபோல், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய துணை செயலாளர் நவீன்குமாரும், தி.மு.க., பக்கம் சென்றதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இவர்கள் இருவரும் தங்களது ஆதரவாளர்களான, அச்செட்டிப்-பள்ளி முன்னாள் பஞ்., தலைவர் சீனிவாசரெட்டி, அக்ரஹாரம் கிளை செயலாளர் அருண்குமார், ஓசூர் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை தலைவர் முரளி, கிளை செயலாளர் மஞ்சுநாத், மாணவ-ரணி துணை செயலாளர் அருண், அச்செட்டிப்பள்ளி பஞ்., முன்னாள் வார்டு தலைவர் சுப்பிரமணி ரெட்டி, நிர்வாகி பிரசாந்த் உட்பட, 500க்கும் மேற்பட்டோர், ஓசூர் அருகே காரப்பள்ளியில் நடந்த மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில், அமைச்சர் சக்க-ரபாணி, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில், தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செங்குட்டுவன், முருகன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச்செயலாளர் மாதேஸ்வரன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us