/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மூதாட்டி உட்பட 3 பேர் மாயம் அரசு பள்ளி மாணவி கடத்தல்மூதாட்டி உட்பட 3 பேர் மாயம் அரசு பள்ளி மாணவி கடத்தல்
மூதாட்டி உட்பட 3 பேர் மாயம் அரசு பள்ளி மாணவி கடத்தல்
மூதாட்டி உட்பட 3 பேர் மாயம் அரசு பள்ளி மாணவி கடத்தல்
மூதாட்டி உட்பட 3 பேர் மாயம் அரசு பள்ளி மாணவி கடத்தல்
ADDED : பிப் 25, 2024 04:11 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே சஜ்ஜல்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் மனைவி கோவிந்தம்மாள், 75. கடந்தாண்டு ஆக., 20 காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது மகள் கோபி, 40, புகார்படி, ராயக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்சத் கோட்னாலா, 19; தளி அடுத்த தம்மாபுரத்திலுள்ள விடுதியில் தங்கி, தனியார் பல்கலை.,ல் பி.டெக்., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 21 காலை விடுதியில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. விடுதி வார்டன் சாந்தகுமார், 35, புகார்படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.
ராயக்கோட்டையை சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவி, கடந்த, 21 இரவு, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், நிஷாந்த் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராயக்கோட்டையை சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும், 16 வயது மாணவி, கடந்த, 21 இரவு வீட்டிலிருந்து மாயமானார். அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், அஞ்செட்டி அருகே தெப்பகுழியை சேர்ந்த வெங்கடேஷ், 21, ஜோதி, 30, அவரது கணவர் கிரீஷ், 30, ஆகியோர், மாணவியை கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் அவர்கள், 3 பேரையும், மாணவியையும் தேடி வருகின்றனர்.