Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க., கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க., கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க., கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க., கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது

ADDED : செப் 14, 2025 05:09 AM


Google News
ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில், தி.மு.க., கவுன்சிலர் உள்-பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் எளையாம்பாளையம் குட்-டையக்காடு அப்புசாமி தோட்டத்தில், நேற்று அதிகாலை காஞ்சி-கோவில் போலீசார் நடத்திய சோதனையில், 7 லிட்டர் கள்ளச்சா-ராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த, 8 கிலோ வெள்ளை வேலாம்பட்டை, ஒரு மண் பானை, பிளாஸ்டிக் பேரல் இரண்டு, காஸ் அடுப்பு ஒன்று, காஸ் டிரம் ஒன்று, ஈய அண்டா மூன்று, பிளாஸ்டிக் குடம் இரண்டு, ரப்பர் டியூப் ஒன்று, சில்வர் குண்டாவில் மூன்று லிட்டர் திராட்சை பழ-ரசம், சில்வர் பேசன் ஒன்று, விவோ போன் ஒன்று ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, பெத்தாம்பாளையம் கோவில் பாளையத்தை சேர்ந்த சுரேஷ் குமார், 42, பெத்தாம்பாளையம் வள்ளி நகரை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி முத்துசாமி, 50, ஆகிய இரு-வரை ஈரோடு மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்தனர். இதைய-டுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் கைதான சுரேஷ் குமார், பெத்தாம்பாளையம் பேரூராட்சி 3வது வார்டு, தி.மு.க., கவுன்சிலராகவும், பெருந்துறை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us