/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கி.கிரியில் 2 நாட்கள் தட்டச்சு தேர்வு :1,024 மாணவ, மாணவியர் பங்கேற்பு கி.கிரியில் 2 நாட்கள் தட்டச்சு தேர்வு :1,024 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கி.கிரியில் 2 நாட்கள் தட்டச்சு தேர்வு :1,024 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கி.கிரியில் 2 நாட்கள் தட்டச்சு தேர்வு :1,024 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கி.கிரியில் 2 நாட்கள் தட்டச்சு தேர்வு :1,024 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : செப் 01, 2025 02:02 AM
கிருஷ்ணகிரி:கடந்த, 2 நாட்கள் நடந்த தட்டச்சு தேர்வில், 1,024 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், கடந்த, 30 மற்றும், 31 என, 2 நாட்கள் தட்டச்சு தேர்வுகள் நடந்தன. இதில், ஆங்கிலம், தமிழ் மொழிகளில், இளநிலை, முதுநிலை மற்றும் உயர்வேக தேர்வு ஆகிய பாடங்களில் தட்டச்சு தேர்வுகள் நடந்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து, வணிகவியல் தட்டச்சு பள்ளிகள் சார்பில், நேற்று முன்தினம் இளநிலை தட்டச்சுத்தேர்வில், 412 மாணவ, மாணவியரும், முதுநிலை தேர்வில், 180 பேரும் பங்கேற்றனர்.
நேற்று நடந்த தட்டச்சு தேர்வில், இளநிலை தட்டச்சு தேர்வில், 269 மாணவ, மாணவியரும், முதுநிலை தேர்வில், 143 பேரும், புதுமுக இளைநிலை தேர்வில், 20 பேரும் என மொத்தம், 1,024 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இத்தேர்வை, தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் சாரதா மேற்பார்வையில், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் சுப்பையா, இளங்கோ மற்றும், 20 ஆசிரியர்கள் முன்னிலையில், தட்டச்சு தேர்வு நடந்தது. இத்தேர்வு மையத்தை பறக்கும்படையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.