Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு

ADDED : ஜூலை 18, 2024 01:24 AM


Google News
கிருஷ்ணகிரி: ஆடி மாத பிறப்பையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

ஆடி மாதத்தில், அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பொங்கல் வைத்தல் என இம்மாதம் முழு-வதும் அம்மனை வேண்டி வழிபடுவர்.

ஆடி மாதம் நேற்று பிறந்ததையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்-திலுள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

அதன்படி, கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவில், அவதா-னப்பட்டி மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல், ஜோதி விநாயகர் தெருவிலுள்ள முத்து மாரியம்மன் கோவில், பழையபேட்டை சமயபுரம் மாரியம்மன் கோவில் உட்-பட பல்வேறு மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடுகள் நடந்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us