Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு உதவி பெறும் பள்ளியில் உணவின்றி மாணவியர் தவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளியில் உணவின்றி மாணவியர் தவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளியில் உணவின்றி மாணவியர் தவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளியில் உணவின்றி மாணவியர் தவிப்பு

ADDED : ஜூன் 19, 2024 02:07 AM


Google News
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், அரசு நிதிஉதவி பெறும் புனித ஜான்போஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இங்கு படிக்கும், 1,200 மாணவியரில், 450க்கும் மேற்பட்டோர், தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில், தினமும் மதிய உணவு சாப்பிடுகின்றனர்.

இந்நிலையில், பள்ளியில் பணியாற்றிய சமையல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர், வயது முதிர்வால் பணி நிறைவு பெற்று விட்டனர். அந்த காலி பணியிடத்திற்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.

கடந்த, 10ல் பள்ளிகள் திறந்த நிலையில், ஒரு வாரத்திற்கும் மேலாக, மாணவ - மாணவியர் சரியான மதிய உணவின்றி தவிக்கின்றனர். மாவட்ட கலெக்டர் சரயு, மாநகராட்சி கமிஷனர் சினேகா, மேயர் சத்யா ஆகியோருக்கு, பள்ளி நிர்வாகம் மனு கொடுத்துள்ளது.

ஆனால், புதிய சமையல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்படவில்லை. ஏழ்மை நிலையிலுள்ள மாணவியர் படிக்கும் இப்பள்ளிக்கு, உடனடியாக சமையல் பணியிடங்களை நிரப்ப, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us