Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பி.ஹெச்.,ல் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க தீர்மானம்

பி.ஹெச்.,ல் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க தீர்மானம்

பி.ஹெச்.,ல் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க தீர்மானம்

பி.ஹெச்.,ல் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க தீர்மானம்

ADDED : ஜூலை 14, 2024 02:10 AM


Google News
கிருஷ்ணகிரி: வட்டார, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்-பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டுமென, மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க, மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநிலத்த-லைவர் விஜயகுமரன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ரவி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சண்முகம் வேலை அறிக்கையையும், மாநில பொருளாளர் ஹேம-லதா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

மக்கள் நலவாழ்வு துறையில், 1,500க்கும் மேற்பட்ட மருந்தா-ளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய வெப்ப நிலையிலும், தடுப்பூசிகளை பராம-ரித்து வைக்க, குளிர்பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்கு-களை அமைக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம், பணி நியமனம் செய்யப்பட்ட மருந்தாளுனர்களை பணி நிரந்தரம்

செய்ய வேண்டும். 385 வட்டார, ஆரம்ப சுகாதார நிலையங்-களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே பணியிலுள்ள மருந்தாளுனர்களுக்கு கூடுத-லாக, 3 கட்ட பதவி உதவி உயர்வு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் ரவி, செந்தில், அசோக்குமார், சங்கர், மதுலிங்கம் முத்துக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us