Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு பள்ளியில் முட்புதர்கள் அகற்றம்

அரசு பள்ளியில் முட்புதர்கள் அகற்றம்

அரசு பள்ளியில் முட்புதர்கள் அகற்றம்

அரசு பள்ளியில் முட்புதர்கள் அகற்றம்

ADDED : ஜூலை 26, 2024 03:18 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட் டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் கழிப்பறைக்கு முன்பு, 6 அடி உயரம் வரை வளர்ந்திருந்த முட்புதர்களை அகற்ற பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இச்செய்தி கடந்த, 3 நாட்களுக்கு முன்பு, 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது. இதையடுத்து, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், பள்ளி வளா-கத்தில் இருந்த முட்புதர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று துாய்மை படுத்தப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு கூறுகையில், ''பெற்றோர் கோரிக்கை படி பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த முட்புதர்களை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து பள்ளி வளா-கத்தை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெற்றோர்களும், பள்ளி வளா-கத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் வேந்தன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us