/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காலை உணவு திட்டம் கண்காணிக்கும் பணி ஆசிரியர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் காலை உணவு திட்டம் கண்காணிக்கும் பணி ஆசிரியர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
காலை உணவு திட்டம் கண்காணிக்கும் பணி ஆசிரியர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
காலை உணவு திட்டம் கண்காணிக்கும் பணி ஆசிரியர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
காலை உணவு திட்டம் கண்காணிக்கும் பணி ஆசிரியர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 03:18 AM
கிருஷ்ணகிரி: காலை உணவு திட்டம் கண்காணிப்பு பணியில் இருந்து, ஆசிரி-யர்களை விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்(டிட்டோ ஜாக்) சார்பில், கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலகம் முன்பு நேற்று மாலை, 5:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் ஹென்றி பவுல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள் பேசியதாவது: காலை நேரத்தில் பெண்களுக்கு இருக்கும் அதிகமான பணிகளை கருத்தில் கொள்ளாமல், காலை உணவு திட்டத்தை தினமும் கண்-காணிக்க உத்தரவிட்டதன் விளைவாக, கல்குறுக்கி ஆசிரியை விபத்தில் இறந்தார். பல சிறு விபத்துகள் இன்னும் வெளியே வர-வில்லை. காலை உணவு திட்டத்திற்காக முன்கூட்டியே செல்ல வேண்டும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் நடக்கும். நெடுந்தொலைவு உள்ள பள்ளிக்கு காலையில், 6:00 அல்லது, 7:00 மணிக்கு செல்ல வேண்டி வரும். சில இடங்களுக்கு பஸ் வசதியும் இருக்காது. இந்த கூடுதல் வேலைபளு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திறனை கூட பாதிக்கலாம். இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு காலை உணவு திட்டத்தை கண்கா-ணிக்கும் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். அதற்கு பதிலாக, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பஞ்., தலைவர், வார்டு உறுப்பினர், கவுன்சிலர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை கண்காணிக்க பயன்படுத்தலாம்.
இவ்வாறு, ஆசிரியர்கள் பேசினர்.