ADDED : ஜூன் 14, 2024 01:01 AM
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த குடியேகவுண்டனுாரை சேர்ந்தவர் சம்பத்குமார், 30, டிரைவர்.
இவர், அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் பழகியுள்ளார். அவரிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த, 8ல் கடத்தி சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதன்படி சிறுமியை கடத்திய சம்பத்குமாரை, போலீசார் தேடி வருகின்றனர்.