/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாமனார், மாமியாருடன் தகராறு; பெண் மாயம் மாமனார், மாமியாருடன் தகராறு; பெண் மாயம்
மாமனார், மாமியாருடன் தகராறு; பெண் மாயம்
மாமனார், மாமியாருடன் தகராறு; பெண் மாயம்
மாமனார், மாமியாருடன் தகராறு; பெண் மாயம்
ADDED : ஜூன் 14, 2024 01:00 AM
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த கே.புதுாரை சேர்ந்தவர் சாந்தி, 46; இவருக்கு ஓசூர், காந்தி நகரை சேர்ந்த முருகேசன் என்பவருடன் திருமணமானது.
சாந்திக்கும், முருகேசனின் பெற்றோருக்குமிடையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த, 8ல் சாந்திக்கும் அவரது மாமனார், மாமியாருக்கும் வழக்கம் போல தகராறு ஏற்பட்டது. இதில், வீட்டை விட்டு வெளியே சென்ற சாந்தி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சாந்தியின் கணவர் முருகேசன் புகார் படி, ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.