ADDED : ஜூன் 11, 2024 01:52 PM
போச்சம்பள்ளி: தென்மேற்கு பருவமழை துவங்கயுள்ள நிலையில், அதிக மழை மற்றும் வெள்ளம் உள்ளிட்டவைகளிருந்து விவசாயிகள், பொதுமக்கள் பாதுகாத்து கொள்வது குறித்து, விழிப்புணர்வு ஒத்திகை நேற்று நடந்தது.
போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த இந்த ஒத்திகை நிகழ்ச்சி, போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையில் நடந்தது. இதில், மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடந்தது.