Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 21, 2024 10:55 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி கிளை தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் முனிரத்தினம் துவக்கி வைத்து பேசினார். இணை செயலாளர் நந்தியப்பன், துணை தலைவர்கள் மோகன், ராமலிங்கம் ஆகியோர் பேசினர்.

மின்வாரிய ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 4 சதவீத பஞ்சப்படி நிலுவை தொகையை பெற வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி, காப்பீடு நிறுவனத்தினரிடம் பண பயன்களை முழுமையாக பெற வேண்டும். விதவை மகள் விவாகரத்தானவர்களுக்கு நிறுத்தி வைத்துள்ள குடும்ப ஓய்வூதியத்தை வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில், ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us