/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 4 நாட்களாக மழையில்லாததால் கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து சரிவு 4 நாட்களாக மழையில்லாததால் கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து சரிவு
4 நாட்களாக மழையில்லாததால் கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து சரிவு
4 நாட்களாக மழையில்லாததால் கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து சரிவு
4 நாட்களாக மழையில்லாததால் கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து சரிவு
ADDED : ஜூன் 13, 2024 05:28 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 4 நாட்களாக மழையில்லாததால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இம்மாத துவக்கத்தில் பரவலாக பெய்த மழையால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வந்தன. தற்போது, 4 நாட்களாக மாவட்டத்தில் மழையில்லாததால், கடும் வெப்பம் வாட்டி வருகிறது. கடந்த, 9 முதல் நேற்று வரை, ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வினாடிக்கு, 224 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று முன்தினம் வரை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, 416 கன அடியாக இருந்து நீர்வரத்து நேற்று, 269 கன அடியாக சரிந்தது.
பாரூர் பெரிய ஏரி, முழு கொள்ளளவுடன் உள்ளதால், கே.ஆர்.பி., அணையிலிருந்து பாரூர் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு, இடது மற்றும் வலது புற வாய்க்கால் மூலம், 12 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று நீர்மட்டம், 46 அடியை எட்டியது. பாம்பாறு அணையின் மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 4.35 அடியாக நீர்மட்டம் இருந்தது. சூளகிரி சின்னாறு அணை தற்போது நீரின்றி வறண்டுள்ளது.