Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பால் பவுடர் திருடிய நிறுவன ஊழியர் கைது

பால் பவுடர் திருடிய நிறுவன ஊழியர் கைது

பால் பவுடர் திருடிய நிறுவன ஊழியர் கைது

பால் பவுடர் திருடிய நிறுவன ஊழியர் கைது

ADDED : ஜூலை 22, 2024 12:30 PM


Google News
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் கோவிந்த செட்டி தெருவை சேர்ந்தவர் சரவணன், 52; இவர் பால் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில், பையூர் அருகே உள்ள மாணிக்கனுாரை சேர்ந்த சி.சரவணன், 42, என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த, 19 அதிகாலை, 3:00 மணிக்கு, நிறுவனத்திலிருந்த, 500 கிலோ பால் பவுடர்கள் அடங்கிய, 20 கோணிப்பைகளை நிறுவன ஆட்டோவில் திருடிச்சென்றார். இது குறித்து உரிமையாளர் சரவணன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் ஊழியர் சரவணனை கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பால் பவுடர்கள், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us