/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சூளகிரி அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், நகை திருட்டு சூளகிரி அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், நகை திருட்டு
சூளகிரி அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், நகை திருட்டு
சூளகிரி அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், நகை திருட்டு
சூளகிரி அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், நகை திருட்டு
ADDED : ஜூலை 14, 2024 03:48 AM
ஓசூர்: சூளகிரி அருகே, கார் கண்ணாடியை உடைத்து பணம், நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே உடன்குடியை சேர்ந்தவர் அந்தோணி, 51; மும்பையில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்; இவர், தன் குடும்பத்தினருடன் மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னாறு தேசிய நெடுஞ்சாலையோர பிரியாணி ஓட்டலுக்கு எதிரே அன்று மதியம், 3:15 மணிக்கு தன் பி.எம்.டபிள்யூ காரை நிறுத்தி விட்டு, மதிய உணவு சாப்பிட ஓட்டலுக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பின் திரும்பியபோது, காரின் வலதுபக்க பின்புற கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காரில் வைத்துச் சென்ற, 70,000 ரூபாய், 2 கிராம் தங்க மோதிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. அந்தோணி புகார் படி, சூளகிரி போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.