/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஜூலை 25, 2024 02:03 AM
ஓசூர்:கெலமங்கலம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த சின்னட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 30, தனியார் நிறுவன ஊழியர்.
கடந்த 18ம் தேதி இரவு, 'டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி' பைக்கில், கெலமங்கலம் - ஓசூர் சாலையில் சென்றார். அக்கொண்டப்பள்ளி அருகே இரவு 11:30 மணிக்கு எதிரில் வந்த 'மாருதி' ஆம்னி வேன், பைக் மீது மோதியது.
படுகாயமடைந்த மாரிமுத்து, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்கிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் மூளைச்சாவு அடைந்தார்.
மாரிமுத்து உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது மனைவி பாஞ்சாலி, 20, மற்றும் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர்.
மாரிமுத்துவின் சிறுநீரகங்கள் சேலம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கும், இதயம் சென்னைக்கும், கல்லீரல் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
மாரிமுத்து- உடலுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பூவதி தலைமையில், டாக்டர்கள் மருத்துவப் பணியாளர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின், அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மாரிமுத்துவுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.