Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு முகாம்

பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு முகாம்

பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு முகாம்

பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு முகாம்

ADDED : ஜூலை 19, 2024 02:09 AM


Google News
கிருஷ்ணகிரி: காரீப் பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வது குறித்த, விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி கிரா-மத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி தலைமை வகித்து பேசினார்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், பாலேப்பள்ளி, பர்கூர், போச்சம்பள்ளி, மத்துார், நாகரசம்பட்டி பிர்காவிற்கு உட்-பட்ட கிராமங்களில், காரீப் பருவத்திற்கான நெல், ராகி, மக்காச்-சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை மற்றும் பருத்தி போன்ற அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு பயிர் காப்பீடு விருப்பத்தின் படி செய்து கொள்ளலாம். பாலேப்-பள்ளி மற்றும் மத்துார் பிர்கா உட்பட்ட கிராமங்களில், நெற் பயி-ருக்கு வரும், 31, பர்கூர், போச்சம்பள்ளி, மத்துார் பிர்காவிற்கு வரும் ஆக., 16, பாலேப்பள்ளி, நாகரசம்பட்டி மற்றும் போச்சம்-பள்ளி பிர்காவிற்கு உட்பட்ட கிராமங்களில் பயிரிட்டுள்ள பருத்-திக்கு வரும் செப்., 30க்குள் பதிவு செய்து இழப்பீடு பெறலாம். பிர்கா வாரியாக பயிர் அறுவடை சோதனை செய்து, இழப்பின் அளவை கணித்து பயிர் காப்பீடு வழங்கப்படும் என, வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us