Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'ஆஷாடா' மாத பிறப்பு பூ மார்க்கெட் 'வெறிச்'

'ஆஷாடா' மாத பிறப்பு பூ மார்க்கெட் 'வெறிச்'

'ஆஷாடா' மாத பிறப்பு பூ மார்க்கெட் 'வெறிச்'

'ஆஷாடா' மாத பிறப்பு பூ மார்க்கெட் 'வெறிச்'

ADDED : ஜூலை 09, 2024 10:55 PM


Google News
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே இரு பூ மார்க்கெட்டுகளில் தினமும், 300 டன்னுக்கு மேல் பூ விற்பனைக்கு வரும். கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, பூக்கள் விலை இறங்குமுகமாக உள்ளன.

தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் உள்ள ஓசூரில், கடந்த, 5ல் 'ஆஷாடா' என்ற ஆடி மாதம் துவங்கியது. இம்மாதத்தில் அவர்கள், எந்த சுப நிகழ்ச்சிகளும் செய்ய மாட்டர். அதனால், ஓசூர் பூ மார்க்கெட்டுகளில் மக்கள் வருகையின்றி, விலையும் குறைந்துள்ளது.

கடந்த வாரம், 300க்கு விற்ற ஒரு கிலோ சாமந்தி, நேற்று, 200 ரூபாய்க்கும், 60க்கு விற்ற செண்டுமல்லி, 25க்கும், 120க்கு விற்ற பட்டன் ரோஜா, 40க்கும், 400க்கு விற்ற மல்லி, 300க்கும், 600க்கு விற்ற கனகாம்பரம், 300க்கும், 400க்கு விற்ற முல்லை, 300க்கும், 100க்கு விற்ற பன்னீர் இலை, 40 ரூபாய்க்கும் விற்றன. அடுத்து வரும் அமாவாசை நாள் வரை, ஆஷாடா மாதம் என்பதால், அதுவரை பூ விலை குறைவாக தான் இருக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us