Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 159 நாட்களுக்கு பிறகு 50 அடியை எட்டிய கே.ஆர்.பி., அணை

159 நாட்களுக்கு பிறகு 50 அடியை எட்டிய கே.ஆர்.பி., அணை

159 நாட்களுக்கு பிறகு 50 அடியை எட்டிய கே.ஆர்.பி., அணை

159 நாட்களுக்கு பிறகு 50 அடியை எட்டிய கே.ஆர்.பி., அணை

ADDED : ஜூலை 15, 2024 11:51 PM


Google News
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் கடந்த, 159 நாட்களுக்கு பிறகு நேற்று, 50 அடியை எட்டியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு இறுதியில், 4 மாதங்கள் பரவலாக மழையால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வ-ரத்து இருந்தது. கடந்தாண்டு ஜூன், 4 முதல் இந்தாண்டு பிப்., 6 வரை தொடர்ந்து, 248 நாட்கள், 50 அடிக்கு மேல் அணையில் நீர் இருப்பு இருந்தது. பின் மழையின்றி பிப்., 7ல், 49.95 அடியாக நீர்-மட்டம் சரிந்தது. அதன்பிறகு பருவமழை பொய்த்து நீர்வரத்து குறைந்து, அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

கடந்த, 2 மாதமாக மாவட்டத்தில் அவ்வப்போது லேசான மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிக-ரித்து, நீர்மட்டம் மொத்தமுள்ள, 44.28 அடியில், 42.31 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து கடந்த, 4 முதல் வினாடிக்கு, 400 கன நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 நாட்களுக்கு மேல், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்தால் நீர்-மட்டம், 159 நாட்களுக்கு பிறகு நேற்று, 50 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு, 305 கன அடி நீர்வரத்து உள்ளது. அணை-யிலிருந்து பாசனத்திற்கு இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில், 185 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தாலும், அணை நீர்மட்டம், 51 அடியை தாண்டி-னாலும், ஆற்றங்கரையோர, 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us