Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சிறுமி உட்பட 4 பெண்கள் மாயம்

சிறுமி உட்பட 4 பெண்கள் மாயம்

சிறுமி உட்பட 4 பெண்கள் மாயம்

சிறுமி உட்பட 4 பெண்கள் மாயம்

ADDED : ஜூலை 26, 2024 03:16 AM


Google News
கிருஷ்ணகிரி: ஓசூர், ஒன்னலவாடியை சேர்ந்தவர் வைஷ்ணவி, 23, பி.இ., பட்டதாரி; கடந்த, 22ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது பெற்றோர் ஓசூர் டவுன் போலீசில் புகார-ளித்தனர்.

அதில், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்-றனர்.

ஓசூர், தேர்பேட்டையை சேர்ந்தவர் அம்ருதா, 19, பி.சி.ஏ., இரண்டாமாண்டு மாணவி; கடந்த, 23 காலை, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது பெற்றோர் ஓசூர் டவுன் போலீசில் புகாரளித்தனர். அதில், ஓசூரை சேர்ந்த சந்துரு, 20, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

ஓசூர், சானசந்திரத்தை சேர்ந்தவர், 14 வயது சிறுமி. கடந்த, 20ல் மாயமானார். சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதில், தர்மபுரியை சேர்ந்த கருப்-பண்ணன், 22, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்-ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

போச்சம்பள்ளி அடுத்த பாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் காவ்யா, 23, கூலித்தொழிலாளி; கடந்த, 22ல் வீட்டிலிருந்து மாய-மானார். அவரது கணவர் கணேசன், போச்சம்பள்ளி போலீசில் புகாரளித்தார். அதில், மண்ணடிப்பட்டியை சேர்ந்த சந்துரு, 21 என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us