Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நர்ஸ் உட்பட 2 பெண்கள் மாயம்

நர்ஸ் உட்பட 2 பெண்கள் மாயம்

நர்ஸ் உட்பட 2 பெண்கள் மாயம்

நர்ஸ் உட்பட 2 பெண்கள் மாயம்

ADDED : ஜூலை 19, 2024 02:07 AM


Google News
ஓசூர்: சூளகிரி கீழ்தெருவை சேர்ந்தவர் ஜீவிதா, 19; தனியார் மருத்து-வமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த, 15ல், மருத்துவ-மனைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை.

இது குறித்து ஜீவிதாவின் பெற்றோர், சூளகிரி போலீசில் புகார-ளித்தனர். அதில், வள்ளுவர்புரத்தை சேர்ந்த சூர்யகாந்த், 20 என்ற வாலிபர் மீது, சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்-படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

* கிருஷ்ணகிரி அடுத்த பாலக்குறியை சேர்ந்தவர் லட்சுமி, 19; கடந்த, 16ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. லட்சுமியின் சகோதரர் திருப்பதி புகார் படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

கிரானைட் கற்கள் கடத்தல்

ஓசூர், ஜூலை 19-

கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு தாசில்தார் கோகுல கண்ணன் மற்றும் அதிகாரிகள் உத்தனப்பள்ளி அருகே, ஓபேபா-ளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில் கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. கோகுல கண்ணன் புகார் படி, உத்தனப்பள்ளி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us