Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு பணிக்கு போலி நியமன ஆணை வழங்கியவர் மீது போலீசார் வழக்கு

அரசு பணிக்கு போலி நியமன ஆணை வழங்கியவர் மீது போலீசார் வழக்கு

அரசு பணிக்கு போலி நியமன ஆணை வழங்கியவர் மீது போலீசார் வழக்கு

அரசு பணிக்கு போலி நியமன ஆணை வழங்கியவர் மீது போலீசார் வழக்கு

ADDED : ஜூலை 03, 2024 08:00 AM


Google News
பாப்பாரப்பட்டி, : அரசு பணி வாங்கி தருவதாக கூறி, பணத்தை பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணை வழங்கியவர் மீது, பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாப்பாரப்பட்டி அடுத்த வெங்டாபுரம் ராஜிவ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மனைவி காமாட்சி, 26; ஆறுமுகம் கடந்த, 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். கடந்த, 2022ல் காமாட்சி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் உறவினரை பார்க்க சென்றுள்ளார். அங்கு பணியாற்றி வந்த பாப்-பிரெட்டிப்பட்டி, மடதள்ளியை சேர்ந்த அதியமான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர், காமாட்சிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 4.25 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, ஓசூர் நீதிமன்றத்தில் பணியாற்ற போலி பணி நியமன ஆணை தயாரித்து கொடுத்துள்ளார். காமாட்சி புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us