ADDED : ஜூலை 14, 2024 02:15 AM
ஓசூர்: ஓசூர் அடுத்த ஒன்னல்வாடி பஞ்., சோமநாதபுரம் கிராமத்தில், மாரப்பா என்பவருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சொந்த வீடு கட்டுவதற்கான பணி ஆணையை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று வழங்கினார்.
மேலும், பூமிபூஜை செய்து வீடு கட்டும் பணியை துவக்கி வைத்தார். ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, சூளகிரி முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், பஞ்., தலைவர் மாதேஷ் உட்பட பலர் பங்-கேற்றனர்.