ADDED : ஜூலை 08, 2024 05:36 AM
ஓசூர், : சூளகிரி அருகே காமன்தொட்டியை சேர்ந்தவர் முனிசந்திரப்பா, 39, ஓட்டல் நடத்தி வருகிறார்; நேற்று முன்தினம் காலை வீட்டின் முன், தன் மாருதி ஈக்கோ காரை நிறுத்தியிருந்தார்.
இதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாய். முனிசந்திரப்பா புகார்படி, சூளகிரி போலீசார் விசாரிக்-கின்றனர்.