Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

ADDED : ஜூலை 08, 2024 05:35 AM


Google News
ஓசூர், : ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க, அனைத்துத்துறை ஓய்வூ-தியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க, ஓசூர் வட்ட பேரவை கூட்டம், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

வட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். இணை செய-லாளர் நஞ்சுண்டரெட்டி வரவேற்றார். துணைத்தலைவர் தேப்-பய்யா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சரவணபவன், கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். வட்ட செயலாளர் சந்திர-சேகரன் அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் துரை, கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில், தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 70 வயது கடந்த அனைத்து ஓய்வூதியர்க-ளுக்கும், கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாயை, சத்துணவு, அங்-கன்வாடி, பட்டு வளர்ச்சித்துறை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஓசூர் அரசு மருத்துவமனை அருகில், பெண்கள், முதியவர்க-ளுக்கு வசதியாக, கழிவறை கட்டி கொடுக்க வேண்டும். காப்பீடு திட்ட குளறுபடிகளை நீக்க வேண்டும். ஓசூரை தனி மாவட்ட-மாக அறிவிக்க வேண்டும்.

மண்டல தலைவர் சீனிவாசலு, மாவட்ட துணைத்தலைவர் வெங்-கடேசன், பொருளாளர் ரவிச்சந்திரன், இணை செயலாளர் ராஜா-மணி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னதாக, சங்க உறுப்பினர்

களுக்கு கண் பரிசோதனை முகாம்

நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us