Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கால்வாயில் விழுந்தவர் சாவு

கால்வாயில் விழுந்தவர் சாவு

கால்வாயில் விழுந்தவர் சாவு

கால்வாயில் விழுந்தவர் சாவு

ADDED : மார் 25, 2025 12:44 AM


Google News
கால்வாயில் விழுந்தவர் சாவு

சூளகிரி:சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளியை சேர்ந்தவர் குர்ரப்பா, 45. கூலித்தொழிலாளி; இவர் அக்கிராமத்தில் தனியார் நிறுவனம் பின்புறமுள்ள கால்வாயில், நேற்று முன்தினம் மதியம் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

ஓசூர்:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., கட்சி சார்பில், ஓசூரில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகி சாதிக்கான் தலைமை வகித்தார். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், அர்ச்சகர் புருசோத்தம சர்மா, பாதிரியார் திவாகர், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி அசேன் ஆகியோர் பேசினர். கிருஷ்ணகிரி தொகுதி, காங்., பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகி மைஜா அக்பர், மாநகராட்சி கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி, இந்திராணி உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us