/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம் பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்
பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்
பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்
பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்
ADDED : மார் 14, 2025 01:48 AM
பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில், நேற்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் மண்டல அளவிலான மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர்கள் செல்வகுமார், சிவநேசன், ரிஸ்வான் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.
போராட்டத்தில், பட்டு வளர்ச்சித்துறையில் உள்ள, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளநிலை பட்டு ஆய்வாளர், அமைச்சு பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இளநிலை பட்டு ஆய்வாளர் முதல், உதவி இயக்குனர் வரையிலான பணிமூப்பு பட்டியலை விரைந்து வெளியிட்டு உதவி பட்டு ஆய்வாளர், ஆய்வாளர், உதவி இயக்குனர், இணை இயக்குனர் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் தாமதமின்றி பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ள சரண்விடுப்பு ஒப்பளிப்பு உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், பட்டு வளர்ச்சித்துறை மாநில செயலாளர் ராஜ்குமார், மீன்துறை ஊழியர் சங்க மாநில பொருளாளர் நந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.