/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூன் 16, 2025 07:38 AM
கரூர்: மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பகுதிக்கு குறுவை சாகுபடிக்காக, கடந்த, 12ல் காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 3,571 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 4,121 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில் திறக்கப்பட்டது. தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்காலில், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 18.45 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.