Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

ADDED : ஜன 27, 2024 04:01 AM


Google News
கரூர்: தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், மெல்ல மெல்ல, தக்காளியின் விலை குறைய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில், கடந்த கார்த்திகை மாதத்தில் பனி பொழிவு மற்றும் மழை இருந்தது. குறிப்பாக, அதிகாலையில் நிலவிய கடும் பனி பொழிவால், தக்காளி செடியில் உள்ள பூக்கள் உதிர்ந்தது. 30 சதவீதம் முத ல், 40 சதவீதம் வரை தக்காளியின் வரத்து குறைந்தது.

கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் அளவும் குறைந்தது. கடந்த மாதம் கிலோ, 45 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்பனையானது. மழை குறைவால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைய தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, தக்காளி மொத்த வியாபாரிகள் கூறியதாவது:

வரத்து குறைவால் முதல் ரக தக்காளி, 50 ரூபாய்க்கும், இரண்டாம் தர தக்காளி, 45 ரூபாய்க்கும் விற்றது. சில்லரை விற்பனைகளில், கொஞ்சம் கூடுதலாக விலை இருந்தது. இந்த விலை, தை மாதம் முடியும் வரை நீடிக்கும் என எதிர்பார்த்தோம். இந்நிலையில், மழை குறைந்ததால், தக்காளி செடிகளில், பூக்கள் உதிர்வது குறைந்து, வரத்து அதிகரித்துள்ளது. கிலோ தக்காளி, 30 ரூபாயில் இருந்து, 20 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.

இவ்வாறு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us