Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கொத்தனார் மீது தாக்குதல் மூவரிடம் விசாரணை

கொத்தனார் மீது தாக்குதல் மூவரிடம் விசாரணை

கொத்தனார் மீது தாக்குதல் மூவரிடம் விசாரணை

கொத்தனார் மீது தாக்குதல் மூவரிடம் விசாரணை

ADDED : செப் 11, 2025 01:23 AM


Google News
குளித்தலை குளித்தலை அடுத்த மேட்டுமகாதானபுரம், வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சந்தோஷ், 22; கொத்தனார். இவர் நண்பருடன், தனக்கு சொந்தமான டூவீலரில், கடந்த, 7 இரவு, 8:30 மணிக்கு, கம்மநல்லுார் டீக்கடையில் டீ குடிக்க சென்றனர்.

டீ குடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு காமன்கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த அர்ஜூன், 20 மற்றும் 17 வயது சிறுவன், பிரியன், 19, ஆகிய மூவரும் ஓட்டி வந்த டூவீலர், சந்தோஷ் மீது மோதுவதுபோல் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சந்தோஷ் கேட்டபோது, மூவரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், மூவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us