Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அம்மன் கோவில்களில் தீர்த்தக்குட ஊர்வலம்

அம்மன் கோவில்களில் தீர்த்தக்குட ஊர்வலம்

அம்மன் கோவில்களில் தீர்த்தக்குட ஊர்வலம்

அம்மன் கோவில்களில் தீர்த்தக்குட ஊர்வலம்

ADDED : ஜூன் 16, 2025 07:43 AM


Google News
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கள்ளப்பள்ளி தெற்கு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, கள்ளப்பள்ளி தெற்கு கிராம பகுதி மக்கள் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு லாலாப்பேட்டை வழியாக கோவிலுக்கு சென்று, அம்மன் சன்னதியில் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடக்கிறது.

* வயலுார் பஞ்., கோடங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள பகவதியம்மன், பாம்பலம்மன் ஆகிய சுவாமிகள் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின், அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதை தொடர்நது, பகவதியம்மன், பாம்பலம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us