Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/தஞ்சமடைந்த காதல் ஜோடி அறிவுறுத்தலின்படி பிரிந்தனர்

தஞ்சமடைந்த காதல் ஜோடி அறிவுறுத்தலின்படி பிரிந்தனர்

தஞ்சமடைந்த காதல் ஜோடி அறிவுறுத்தலின்படி பிரிந்தனர்

தஞ்சமடைந்த காதல் ஜோடி அறிவுறுத்தலின்படி பிரிந்தனர்

ADDED : ஜூலை 03, 2025 01:53 AM


Google News
டி.என் பாளையம் பங்களாபுதூர் அருகே, கள்ளிப்பட்டி சஞ்சய்காந்தி வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் கார்த்திக், 31. கட்டட தொழிலாளி. இவரும், அடசபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் தனஸ்ரீ, 23, என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கள்ளிப்பட்டியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், இரு வீட்டாரின் பெற்றோர் மற்றும் போலீசார் நடத்திய பேச்சு

வார்த்தையை தொடர்ந்து, காதல் தம்பதியர் பிரிந்து அவரவர் வீட்டிற்கு சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us